Friday, April 26, 2013


நடிகர் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் சீனிவாசனை ரூ.50 லட்சம் காசோலை மோசடி வழக்கில் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். 

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் இரங்கநாதன் என்பவரிடம் இருந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் பவர் கொடுத்த காசோலையை ரங்கநாதன் வங்கியில் போட்ட போது அது திரும்பி வந்தது. மீண்டும் பணத்தை கேட்டதால் ரங்கநாதனை பவர் ஸ்டார் மிரட்டியுள்ளார்.
உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்னுடன் நடிகர் சங்கம் இருக்கிறது உன்னை தொலைத்து விடுவேன் என்று பவர் ஸ்டார் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தொழில் அதிபர் இரங்கநாதன் பவர் ஸ்டார் மீது சென்னை பொலிஸ் கமிஷனரிடம் முறைப்பாடு கொடுத்தார்.

அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் வீட்டுக்கு சென்ற பொலிசார் இன்று அவரை கைது செய்தனர்.

மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below