Friday, May 31, 2013

ருத்தி வீரன்’ ரிலீஸான சமயத்தில் ப்ரியாமணி என்றாலே பாவாடை, தாவணி கட்டிய ‘முத்தழகு’ தான் நம் நினைவுக்கு வந்து போவார். அந்தப்படம் கொடுத்த ஹாட்ரிக் வெற்றியை பயன்படுத்தி அவர் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிப்பார் என்று தான் அந்தப்படத்தின் டைரக்டர் அமீரும், ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு, தேடிவந்த எல்லா தெலுங்கு பட வாய்ப்புகளையும் அள்ளி சுருட்டிக் கொண்டு ஆந்திரா பக்கம் போனவர் அங்கு தொடர்ந்து பல படங்களில் அதிரடியாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதன் பயனாக அங்கு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடிவந்து அவரும் படுபிஸியானார்.

ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தெலுங்கு ரசிகர்கள் ப்ரியாமணியின் தொப்புளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் தெலுங்கு பட உலகில் சமீபகாலமாக ப்ரியாமணியின் மார்க்கெட் கடுமையாக ஆட்டம் கண்டு வருகிறது.

அமலாபால், தமன்னா, சமந்தா என இளம் ஹீரோயின்கள் மத்தியில் கொஞ்சம் வயசான ப்ரியாமணியால் தாக்குபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் பரபரப்பான தனது இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக இதுக்கு மேல என்கிட்ட காட்டுறதுக்கு ஒண்ணுமில்ல என்ற ரேஞ்சில் தெலுங்கு படங்களில் சமீபகாலமாக உச்சபட்ச அதிரடி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து நிற்கிறாராம்.

ப்ரியாமணியின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து அங்குள்ள கவர்ச்சி நடிகைகளே ஆடிப்போயிருக்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட வந்த வாய்ப்பயும் கெட்டியா பிடித்துக் கொண்ட அவர் சமீபத்தில்தான் அந்த பாடலுக்கு அவருடன் நடனமாடிவிட்டு வந்திருக்கிறார்.
ராஜூசுந்தரம் நடனம் அமைத்த அந்தப்பாடல் காட்சி பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடல்காட்சியில் அவர் எதிர்பார்த்தபடி படுகவர்ச்சியான உடை அமையவில்லை என்பதால், வருத்தப்பட்ட ப்ரியாமணி முடிந்த அளவுக்கு தனது ஆட்டத்தை நறுக் தெறித்தார் போல் ஆடியுள்ளாராம்.

இந்த ஒரு குத்தாட்டத்தை வைத்து தான் ஹிந்தியின் பட வாய்ப்புகளை தேட திட்டமிட்டிருக்கிறார் ப்ரியாமணி.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below