சித்தார்த், சமந்தா காதல் விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், எந்த ஊடகங்களில் அவர்கள் தலைகாட்டினாலும் காதல் பற்றி தான் கேட்கின்றனராம்.
இதனால், ஊடகப் பேட்டிகளையே அவர்கள் இருவரும் தவிர்த்து வருகின்றனர்.சித்தார்த்தை விட சமந்தா தான் இந்த காதல் செய்தியால் அதிக தலைவலிக்கு ஆளாகியுள்ளார்.
காரணம், சித்தார்த்துடன் தான் பழகிய விடயங்களை, தன் தோழிகளிடம் அவ்வப் போது உளறி கொட்டி வந்தார் சமந்தா.
அவர்கள் தான், இதுபற்றி தங்களது தோழிகளிடம் கூற அப்படியே பரவி விடயம் ஊடகங்கள் வரை சென்று விட்டதாம்.
இதனால், தோழிகள் மீது பயங்கர ஆத்திரத்தில் இருக்கும் சமந்தா தற்போது அத்தனை தோழிகளையும் கட் செய்து விட்டதோடு, தனது புதிய கைப்பேசி நம்பரையும் ரகசியமாக வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment