Friday, May 3, 2013


கார்த்தி நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உட்பட சில படங்களில் அவருடன் இணைந்து கொமடியனாக நடித்திருந்தார் சந்தானம்.

ஆனால் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிப்பாக கூறியுள்ளார் கார்த்தி.

அதேபோல், சிங்கம் 2 படத்தில் விவேக் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

இதையடுத்து தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி.

ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது கொமடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம்.

சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்ன தான் கோபம்? என்று விசாரித்தால், அவர் மீது எந்த கோபமும் இல்லை.

எப்போதும் போல் அவர்கள் நண்பர்களாகத் தான் உள்ளார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து கொமடி செய்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகவே தெரியும் என்பதால் தான், அவருடன் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார் கார்த்தி என்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below