Wednesday, May 15, 2013


தமிழ்சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் பிடித்த நாற்காலி போயஸ் கார்டனில்தான்இருக்கிறது.

ஐயய்யோ... நாம் சொல்ல வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாற்காலியை! கொஞ்ச நாட்களாக வரையப்பட்ட ஒரு சித்திர நாற்காலியை வைத்துக் கொண்டு சிவ கார்த்திகேயனை அதில் உட்கார சொல்லி அவஸ்தை படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வெல் விஷர்ஸ்!
இதையெல்லாம் பார்த்துவிட்டு கொல்லென சிரிக்கிறார் சிவ கார்த்திகேயனும். தமிழ் ஸ்பேஸ்

எதிர்நீச்சல் படத்தின் வெற்றி சந்திப்பில் இதற்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் சிவகார்த்திகேயனின் வெல்விஷரும் தயாரிப்பாளருமான சிவா. 'இந்த படத்தை ஐந்து கோடிக்கு தயாரித்தோம். இதுவரைக்கும் பதினைந்து கோடி வசூலிச்சுருக்கு.

அப்படின்னா சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார்தானே' என்று அவர் கொளுத்திப்போட, ஷாக்கானார் சிவா.'இந்த விஷயத்தை ரஜினி சார் காதுவரைக்கும் கொண்டு போகாமலிருப்பது பிரஸ்சோட கையிலதான் இருக்கு. ஏதோ என் மேல இருக்கிற பாசத்துலயும் அன்புலேயும் இப்படி சொல்றாங்க. பெரிசு பண்ணாதீங்க' என்றார் பவ்யமாக.

ப்ரியா ஆனந்த், நந்திதா, தனுஷ் என்று படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் இந்த பிரஸ்மீட்டுக்கு வந்திருந்து வெற்றியின் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below