Friday, June 7, 2013

‘சிங்கம் - 2’ படத்தில் அனுஷ்காவின் உயரத்தையும், அழகையும் கேலி செய்யும் விதத்தில் சந்தானம் ஒரு பஞ்ச் டயலாக் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

காமெடி என்றாலே அதில் டபுள் மீனிங் டயலாக்குகள் தான் எப்போதுமே அதிகம் இடம்பெறுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தனது நகைச்சுவை காட்சிகளில் சமூக கருத்துகளை அழகாக புகுத்தி சின்ன கலைவாணர் என்ற பட்டத்தைப் பெற்ற நடிகர் விவேக் கூட சமீபகாலமாக தனது நகைச்சுவை உரையாடல்களில் அதிகமாக டபுள் மீனிங் டயலாக்குகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். அதனாலோ என்னவோ அவர் நடிப்பில் ரிலீஸான சமீபகால படங்கள் எதுவும் காமெடி காட்சிகளில் மக்களை பெரிதாகக் கவரவில்லை.

இப்போது அதே பாணியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானமும் பெண்களை கேலி செய்யும் விதமாக டபுள் மீனிங் டயலாக்குகளை கொஞ்சமும் கூச்சப்படாமல் தனது படங்களில் பேசி நடித்து வருகிறார். அலெக்ஸ் பாண்டியன் உட்பட சில படங்களில் அவருடைய டயலாக்குகள் மிகவும் வல்கராக இருப்பதால் மகளிர் அமைப்பினர் உட்பட பலரும் அவருக்கு எச்சரிக்கை செய்தனர்.

அதனால் இனி நான் நடிக்கும் படங்களில் பெண்களை கேலி செய்யும் விதமாக இருக்கும் டயலாக்குகளை பேச மாட்டேன் என்று முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் பெண்களை கேலி செய்யும் டயலாக்குகளை பேச ஆரம்பித்திருக்கிறாராம் சந்தானம். ஆமாம், அவர் நடித்து வரும் ‘சிங்கம் - 2’ படத்தில் அந்தப்படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கும் அனுஷ்காவை அநியாயத்துக்கு கேலியும், கிண்டலும் செய்திருக்கிறாம் சந்தானம்.

அதிலும் அவரது உயரத்தையும், அழகையும் கொண்டல் செய்யும் விதமாக சிங்கம் முதல் பாகத்தில் வரும் "சிங்கத்தை காட்டுல பார்த்திருப்பே, கூண்டுல பார்த்திருப்பே” என்ற டயலாக்கை உல்டா செய்து, "சிங்கம்- 2 படத்தில் "குதிரையை கம்பீரமா ஓடிப் பார்த்துருப்பே, ஆடிப் பார்த்திருப்பே, ஆனால், சுடிதாரில் பார்த்திருக்கியா...” என்று அனுஷ்காவின், உயரத்தையும், கிரங்கடிக்கும் அழகையும் பற்றி ஒரு பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறாராம் சந்தானம்.

இதே மாதிரி பல டயலாக்குகள் இந்தப்படத்தில் தாறுமாறாக பேசியிருக்கிறாராம் சந்தானம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below