ஏற்கனவே சமந்தாவுக்கு தோல் அலர்ஜி பிரச்சனை இருப்பதால் பயந்து போய் வெளிநாட்டுக்கு ஓடி விட்டாராம்.
கடந்த ஒரு வருடமாகவே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
தோல் சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் ரெஸ்ட் எடுத்த அவர், அதற்கு பின் ஆட்டோ நகர், யெட்டோ வெள்ளிப் போயிந்தி மனசு உள்ளிட்ட தெலுங்குப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால் மிகவும் களைப்பாக இருக்கிறாராம்.
மேலும், வெயில் என்றாலே எனக்கு ரொம்ப பீதியாக இருக்கிறது. ஆந்திராவில் அடிக்கும் வெயிலை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.
இந்நிலையில் தற்போது படப்பிடிப்புகளிலுருந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைத்திருப்பதால் அதை உற்சாகமாகக் கழிக்க வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டாராம்.
0 comments:
Post a Comment