ஈரம், அரவான், ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கர்களிடையே கவனிக்கத்தக்க ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆதி. இன்றைய இளைய தலைமுறையின் பிரதிபலிப்பாக இருக்கும் அவருக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலும் தன்னுடைய சக போட்டியாளர்களாக இளம் ஹீரோக்களை அவர் பொறாமைப்பட்டு பார்க்காமல் பாராட்டுவதில் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் இருக்கிறார்.
விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன், அதர்வா, விக்ரம் பிரபு என்று தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்து பாராட்டி பேசும் ஆதி “அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு எங்களது நேரம் வரும்போது நல்ல கதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது” என்கிறார்.
இது என் அம்மா எனக்கு வாழ்க்கையில் கற்று தந்த பாடம் 'இந்த உலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் இதை சொல்லியே என்னை வளர்த்தார்.
அந்த பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல்பட வைக்கிறது. இந்த மனநிலைக்கு அவரது சகோதரர் சத்யா பிரபாஸ் டைரக்ஷனில் தயாராகி வரும் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் டைட்டிலும் காரணமாக இருக்குமா என்று கேட்டால் 'இருக்கலாம், இந்த படம் நிச்சயமாக என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும்” என்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜியின் கோச்சடையான் படத்தின் சரித்திர கால வசனங்களுக்காக மெனக்கெட்டு பயிற்சி செய்து வரும் ஆதி, இந்த அனுபவம் தமிழ்மொழி மேல் எனக்கு உள்ள அபிமானத்தை கூட்டி இருப்பதாக கூறினார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்டன் நடிப்பது ஒரு வரம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் ஆதி.
2013 - ஆம் வருடத்தின் இனி வரும் மாதங்கள் நிச்சயம் எனக்கு பொற்காலமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறாராம் ஆதி.
இது என் அம்மா எனக்கு வாழ்க்கையில் கற்று தந்த பாடம் 'இந்த உலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் இதை சொல்லியே என்னை வளர்த்தார்.
அந்த பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல்பட வைக்கிறது. இந்த மனநிலைக்கு அவரது சகோதரர் சத்யா பிரபாஸ் டைரக்ஷனில் தயாராகி வரும் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் டைட்டிலும் காரணமாக இருக்குமா என்று கேட்டால் 'இருக்கலாம், இந்த படம் நிச்சயமாக என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும்” என்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜியின் கோச்சடையான் படத்தின் சரித்திர கால வசனங்களுக்காக மெனக்கெட்டு பயிற்சி செய்து வரும் ஆதி, இந்த அனுபவம் தமிழ்மொழி மேல் எனக்கு உள்ள அபிமானத்தை கூட்டி இருப்பதாக கூறினார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்டன் நடிப்பது ஒரு வரம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் ஆதி.
2013 - ஆம் வருடத்தின் இனி வரும் மாதங்கள் நிச்சயம் எனக்கு பொற்காலமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறாராம் ஆதி.
0 comments:
Post a Comment