Thursday, May 9, 2013

சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் வெறும், அழகும், திறமையும் மட்டுமிருந்தால் போதாது. அணுசரணையான போக்கும் வேண்டும் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறார் தெலுங்கிலிருந்து வந்த கழுகு நடிகை. 

அதனால், இதுநாள் வரை தான் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் என்றால்கூட நான் பக்கா சைவம். என்னையெல்லாம் அசைவ ஏரியாவுக்கு கூப்பிடாதீர்கள் என்று மூக்கை பொத்திக்கொண்டே பதிலுரைத்து வந்தார் அம்மணி.

ஆனால், எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதுபோல், அபிமான நடிகர்கள் தொடர்ந்து கொடுத்த அழைப்பு காரணமாக இப்போது சில மிட்நைட் பார்ட்டிகளுக்கு ரகசியமாக விசிட் அடிக்கிறார் நடிகை. அப்படி செல்லும்போது, மதுபான வேட்டையிலும் இறங்கும் நடிகை, அசைவ அயிட்டங்களையும் அள்ளி கடாசுகிறாராம்.

நான் சுத்த சைவம்னு பில்டப் கொடுத்துக்கிட்டிருந்தே, ஆனா நேத்து பார்ட்டியில நாங்களே மிரண்டு போகிற அளவுக்கு அசைவத்தை அந்த வெட்டு வெட்டுனே? என்று நடிகர்கள் மறுநாள் கேட்டால், அப்படியா? நானா? என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறாராம் நடிகை. 

அதைக்கேட்டு அப்படின்னா அம்மணிக்கு சரக்கு உள்ளே போயிருச்சின்னா நடக்கிறது எதுவும் தெரியாதா? ரொம்ப நல்லதாப்போச்சு. இனிமே அடிக்கடி பார்ட்டி கொடுத்திட வேண்டியதான் என்று நடிகைக்கு பார்ட்டி கொடுக்க, நான் நீயென்று போட்டி போடுகின்றனர் சில இளவட்ட நடிகர்கள்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below